<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;">ரகங்கள்</h3> <p style="text-align: justify;">பூசா சதபாகர், பூசா மவுசாமி, பூசா நவுபகார் மற்றும் கோமா மஞ்சரி</p> <h3 style="text-align: justify;">மண்</h3> <p style="text-align: justify;">நல்ல வடிகால் வசதியுடைய மணற்பாங்கான (அ) வண்டல் மண்ணின் காரத்தன்மை 7.5-8.0 வரை இருத்தல் வேண்டும். உவர்ப்பு நிலங்களில் வளரும் தன்மையுடையது.</p> <h3 style="text-align: justify;">விதைப்பு மற்றும் பருவம்</h3> <p style="text-align: justify;">ஜூன் – ஜூலை, அக்டோபர் – நவம்பர் விதைகளை பார்களின் பக்கவாட்டில் 15 செ.மீ. இடைவெளியில் ஊன்ற வேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>விதையளவு</strong></p> <p style="text-align: justify;">ஒரு எக்டருக்கு 10 கிலோ விதை</p> <h3 style="text-align: justify;">விதை நேர்த்தி</h3> <p style="text-align: justify;">ஆறிய அரிசி கஞ்சியில் 600 கிராம் ரைசோபியம் நுண்ணுயிர் கலவைக் கொண்டு நேர்த்தி செய்ய வேண்டும். விதைக்கும் முன்னர் 15 - 30 நிமிடம் நிழலில் உலர்த்த வேண்டும்.</p> <h3 style="text-align: justify;">நிலம் தயாரித்தல்</h3> <p style="text-align: justify;">நிலத்தை நன்கு உழுது பண்பட செய்ய வேண்டும். பின் பார் சால்களை 45 செ.மீ இடைவெளியில் அமைக்க வேண்டும்.</p> <h3 style="text-align: justify;">ஊட்டச்சத்து நிர்வாகம்</h3> <p style="text-align: justify;">கடைசி உழவின் போது ஒரு எக்டருக்கு மக்கிய தொழு உரம் 25 டன், அசோஸ்பைரில்லம் 2 கிலோ, பாஸ்போபேக்டீரியா 2 கிலோ, தழைச்சத்து 50 கிலோ, மணிச்சத்து 50 கிலோ மற்றும் சாம்பல் சத்து 25 கிலோ அடியுரமாக இடவேண்டும்.</p> <p style="text-align: justify;">நடவு செய்த 30-வது நாளில் ஒரு எக்டருக்கு 20 கிலோ தழைச் சத்தினை மேலுரமாக இடவேண்டும்.</p> <h3 style="text-align: justify;">பயிர் பாதுகாப்பு</h3> <p style="text-align: justify;">1. இலை தத்துப்பூச்சி</p> <p style="text-align: justify;">மீத்தைல் டெமட்டான் 25 இசி 1 மில்லி (அ) டைமெத்தோயேட் 30 இசி 1 மிலி மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.</p> <p style="text-align: justify;">2. காய்ப்புழு</p> <p style="text-align: justify;">காரரைல் 2 கிராம் (அ) என்டோசல்பான் 2 மிலி என்ற அளவில் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.</p> <h3 style="text-align: justify;">நோய் மேலாண்மை</h3> <p style="text-align: justify;"><strong>இலைப்புள்ளி நோய்</strong></p> <p style="text-align: justify;">மேங்கோசிப் 2 கிராம் என்ற அளவில் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>சாம்பல் நோய்</strong></p> <p style="text-align: justify;">15 நாட்களுக்கொருமுறை நனையும் கந்தகத் தூள் 2 கிராம் என்ற அளவில் தண்ணீரில் கலந்த தெளிக்க வேண்டும்.</p> <h3 style="text-align: justify;">மகசூல்</h3> <p style="text-align: justify;">விதைத்த 90-வது நாளில் 7 – 10 டன் மகசூல் கிடைக்கும்.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: பசுமை விகடன்</p> </div>