<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;">எலுமிச்சம்புல் / லெமன்கிராஸ்</h3> <p style="text-align: justify;"><strong>இரகங்கள்</strong><br />ஒடி – 19, 408, ஆர்ஆர்எல் - 39, பிரகத், பிரமான, சிபிகே - 25, கிருஷ்ணா மற்றும் காவேரி.</p> <p style="text-align: justify;"><strong>மண் மற்றும் தட்பவெப்பநிலை</strong><br />வடிகால் வசதியுடைய அங்கக சத்துக்கள் நிறைந்த, மணற்பாங்கான நிலங்கள் சாகுபடிக்கு உகந்தவை. மண்ணின் கார அமிலத்தன்மை 6.0 ஆக இருக்கவேண்டும். மிதமான தட்பவெப்பநிலையும், அதிக அளவு மழை மற்றும் காற்றிலள்ள ஈரப்பதம் வேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>விதை மற்றும் விதைப்பு </strong><br />ஒர எக்டருக்கு நடவு செய்ய 55,500 வேர்க்கட்டைகள் தேவைப்படும். வேர்க்கட்டை (4 கிலோ / எக்டர்) மூலம் உற்பத்தி செய்யலாம். விதைகளை நாற்றாங்கால் மூலம் உற்பத்தி செய்து ஜ¤ன் - ஜ¤லை மாதங்களில் நடவு செய்யலாம்.</p> <p style="text-align: justify;"><strong>நிலம் தயாரித்தல்</strong><br />நிலத்தை நன்கு உழுது, ஒரு எக்டருக்கு 20-25 டந்ன மக்கிய தொழு உரம் இட்டு நன்கு பண்படுத்தவேண்டும். தேவையற்ற அளவில் பாத்திகள் / பார்கள் அமைத்து நடவு செய்யவேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை</strong><br />ஒரு எக்டருக்கு 50 கிலோ தழைச்சத்து உரத்தை முதல் பாதியை நடவின்போதும் மீதியுள்ள உரத்தை நடவு செய்த ஒர மாதம் கழித்து இடவேண்டும். இரண்டாம் வருடத்தில் அறுவடையின் பின்பும் மற்றும் ஒரு மாததம் கழித்து தழைச்சத்து உரத்தினை இடவேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>நீர் நிர்வாகம்</strong><br />நடவு செய்த உடன் நீர்ப்பாசனம் செய்யவேண்டும். எலுமிச்சை புல்லுக்கு ஏழு முதல் பதினைந்து நாள் இடைவெளியில் நீர்ப்பாசனம் செய்யவேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>பின்நேர்த்தி</strong><br />தேவைப்டும்போது கைக்கிளை எடுக்கவேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>ஒருங்கிணைந்த பயிர்ப்பாதுகாப்பு</strong><br />இப்பயிரில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் காணப்படுவதில்லை.</p> <p style="text-align: justify;"><strong>சார் உறிஞ்சும் பூச்சிகள்:</strong> கட்டுப்படுத்த மீத்தைல் டெமட்டர்ன 25 ஈசி (அ) டைமெத்தோயேட் 30 ஈசி 1 மில்லியனை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்த தெளிக்கவேண்டும்.</p> <p style="text-align: justify;">இலைத்தின்னும் புழுக்களைக் கட்டுப்படுத்த பாசலோன் 35ஈசி (அ) மோனோகுரோட்டோபாஸ் 36ஈசி 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்த தெளிக்கவேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>அறுவடை</strong><br />நடவு செய்த 90வது நாளில் முதல் அறுவடையும் அதன் பின்னர் 75-90 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யவேண்டும். அறுவடையின் போது புல் / புதர்களை தரை மட்டத்திலிருந்து 10-15 செ.மீ அளவில் வெட்டவேண்டும். எண்ணை எடுக்க தண்ணீர் (அ) ஆவியாதல் முறை மூலம் சுத்திகரிக்கவேண்டும். எண்ணை கிடைக்கும் அளவு 0.2 - 0.3 சதவீதம்.</p> <p style="text-align: justify;"><strong>மகசூல்</strong><br />புல் = 20-30 டன் / எக்டர்<br />எண்ணை முதலாம் ஆண்டு = 25 கிலோ / எக்டர்<br />இரண்டாம் ஆண்டு முதல் = 80-100 கிலோ<span class="style60">ோ / எக்டர்</span></p> <h3 style="text-align: justify;">சிட்ரோனெல்லா புல்</h3> <p style="text-align: justify;"><strong>இரகங்கள்</strong> <br />ஜாவா 2, ஜெர்லேப் 2, ஜாவா சிட்ரோனல்லா, ஜாவா 11, சிலோன் சிட்ரோனல்லா, பையே - 13, மன்டாகினி மற்றும் மஞ்சுஷா. <br /><strong><br /><strong>மண் மற்றும் தட்பவெப்பநிலை</strong></strong> <br /><strong><br /><strong>பருவம் </strong></strong><br />ஜூன் - ஜூலை<br /><strong><br /><strong>விதை மற்றும் விதைப்பு</strong></strong><br />வேர்க்கட்டை மூலம் பயிாப்பெருக்கம் செய்யலாம். ஒரு எக்டர் நடவு செய்ய 28,000 வேர்க்கட்டைகள் தேவைப்படுகின்றது.<br /><strong><br /><strong>இடைவெளி</strong><strong>:</strong></strong> 60 x 45 செ.மீ<br /><br /><strong>நிலம் தயாரித்தல்</strong><br />நிலத்தை நன்கு உழுது, ஒரு எக்டருக்கு 30 டன் மக்கிய தொழு உரம் இட்டு நன்கு பண்படுத்தவேண்டும். தேவைக்கேற்றவாறு பார் சால் (அ) பாத்தி அமைத்து நடவு செய்யலாம்.<br /><strong><br /><strong>ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை</strong></strong> <br /><strong><br /><strong>அடியுரம் </strong></strong>: ஒரு எக்டருக்கு 25:40:40 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து.<br /><strong>மேலுரம்</strong><strong> :</strong> ஒரு எக்டருக்கு தழைச்சத்து 75 கிலோவினை சரிபாகமாக (25 கிலோ) பிரித்து நடவு செய்த 3,6 மற்றும் 9 மாதத்தில் இடவேண்டும்.<br /><strong><br /><strong>நீர் நிர்வாகம் </strong></strong><br /><br />நடவு செய்தவுடன் நீர்ப்பாசனம் செய்யவேண்டும். மேலும் உயிர் நீர் நடவு செய்த மூன்றாவது நாளும் அதன் பின்னர் 7-15 நாட்கள் இடைவெளியில் நீர்ப்பாசனம் செய்யவேண்டும்.<br /><strong><br /><strong>பின்நேர்த்தி</strong></strong><br /><br />ஓரிரு முறைத்தேவைக்கேற்ப களை எடுக்கவேண்டும். அறவடையின் பின்னர் மண் அணைத்து நீர்ப்பாய்ச்சவேண்டும்.<br /><strong><br /><strong>ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு</strong></strong><br /><br />இலைத்தீயல் நோயினைக் கட்டுப்படுத்த 0.2 சதவிகிதம் மேங்கோசிப் (அ) ஜினப் மருந்தை 15-20 நாள் இடைவெளியில் தெளிக்கவேண்டும்.<br /><strong><br /><strong>அறுவடை</strong></strong><br /><br />முதல் அறுவடையானது நடவு செய்த 6வது மாதத்தில் செய்யலாம். இரண்டாவது மற்றும் அதகைத் தொடர்ந்து அறுவடையினை ஒவ்வொரு இரண்டரை மாத இடைவெளியிலும் செய்யலாம்.<br /><strong><br /><strong>மகசூல்</strong></strong><br />ஒரு வருடத்திற்கு புல் = 20-30 டன் / எக்டர்<br /><br />எண்ணை எடுக்க காய்ச்சி எடுக்கும் முறையினை பயன்படுத்தவேண்டும்.<br />எண்ணை முதல் வருடம் = 50-100 கிலோ / எக்டர்<br />இரண்டாம் வருடம் = 100-150 கிலோ / எக்டர்<br />ஐந்தாம் வருடம் = 250-300 கிலோ / எக்டர்</p> <h3 style="text-align: justify;">ஜெரேனியம் / பன்னீர் செடி</h3> <p style="text-align: justify;"><strong>இரகங்கள் :</strong> அல்ஜேரியன், ரியூனியான், ஐஐஎச்.ஆர் 8, கொடைக்கானல் 1 மற்றும் ஏகிப்தியன்.</p> <p style="text-align: justify;"><strong>மண் மற்றும் தட்பவெப்பநிலை</strong><br />அங்கக சத்துக்கள், காரச்சத்து மிகுந்து மண்வகைகள் சாகுபடிக்குச் சிறந்ததாகும். கடல் மட்டத்திலிருந்து 1000-2400 மீட்டர் உயரம் வரையிரலும் வருட மழையளவு 100-150 செ.மீ உள்ள பகுதிகளில் சாகுபடி செய்யலாம். மேலும் மண்ணின் கார அமிலத் தன்மை 5.5 முதல் 6.0 வரை இருக்கவேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>விதை மற்றும் விதைப்பு</strong><br />தண்டுக் குச்சிகள் மூலம் பயிர்ப்பெருக்கம் செய்யலாம். சுமார் 10 செ.மீ நீளம், 3-4 கணுக்கள், வளரும் மொட்டு பாகம் கொண்ட குச்சிகளை கடற்பாசி (அ) 10 x 10 செ.மீ பாலித்தீன் பைகளில் நடவு செய்யவேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>இடைவெளி :</strong> 45 x 45 செ.மீ</p> <p style="text-align: justify;"><strong>பருவம்:</strong> ஏப்ரல் - மே</p> <p style="text-align: justify;"><strong>நிலம் தயாரித்தல்</strong><br />நிலத்தை உழுது பண்படுத்தவேண்டும். 30 x 30 செ.மீ அளவில் குழிகள் எடுத்து 250 கிராம் ஆட்டு உரம் இடவேண்டும். பின் இரண்ட மாதங்களான வேர்விட்ட தண்டுக்குச்சிகளை குழிகள் நடுவே நடவு செய்யவேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை</strong><br />ஒரு எக்டருக்கு 60 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து இடவேண்டும். ஒவ்வொரு வருடமும் மணி மற்றும் சாம்பல் சத்தினை அறுவடைக்குப்பின் இடவேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>நீர் நிர்வாகம்</strong><br />ஜெரேனியத்தைப் பொதுவாக மானாவாரிப் பயிராக சாகுபடி செய்யலாம். வறட்சி காலங்களில் நீர்ப்பாசனமானது அவசியமாகும்.</p> <p style="text-align: justify;"><strong>பின்நேர்த்தி</strong><br />தேவைக்கு ஏற்ப களைகளை நீக்கவேண்டும். நோய் தாக்கப்பட்ட செடிகளைத் தோண்டி எரித்து விடவேண்டும். இரண்டாம் ஆண்டு வேர்ப்பகுதியினை கொத்திவிடுவதன் மூலம் வேர் கட்டைகளின் போத்துகளின் உற்பத்தி அதிகமாகும். மகசூல் குறையும் போது செடிகளை தரைப்பகுதியிலிருந்த 15-20 செ.மீ உயரத்தில் வெட்டி கவாத்து செய்யவேண்டும். பொதுவாக 4-5 வருடங்களுக்கொருமுறை கவாத்து செய்யவேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு</strong></p> <p style="text-align: justify;">நூற்புழுக்களை கட்டுப்படுத்த ஒரு எக்டருக்கு 2 கிலோ கார்போபியூரான் குருணை மருந்தை ஜ¤ன் மற்றும் டிசம்பர் மாதங்களில் இடவேண்டும்.</p> <p style="text-align: justify;">வாடல் நோயைக் கட்டுப்படுத்த ஒரு கிராம் மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வேர்ப்பாகம் நனையுமாறு மாதம் ஒரு முறை ஊற்றவேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>அறுவடை</strong><br />நடவுசெய்த ஆண்டில் 7-8வது மாதத்தில் முதல் அறுவடை செய்யலாம். அதன் பின்னர் ஒரு ஆண்டில் 3 முதல் 4 அறுவடை பாகத்துடன் 6-12 கணுக்களுடைய பகுதியினை அறுவடை செய்து 2-3 மணிநேரம் நிழலில் உலரவைத்து எண்ணை எடுக்க பயன்படுத்தவேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>மகசூல்</strong><br /><strong>இலைத் தண்டுப்பாகம் :</strong> 20 -25 டன் / எக்டர்<br /><strong>எண்ணை :</strong> 15-20 கிலோ / எக்டர்</p> <h3 style="text-align: justify;">பால்மரோசா புல்</h3> <p style="text-align: justify;"><strong>இரகங்கள் </strong><br />டிரிஸ்னா, பிஆர்சி 1, ஐடபுள்யூ 31245, 3244, ஒபிடி 1,2 மற்றும் ஆர்ஆர்எல் (பி) – 77.</p> <p style="text-align: justify;"><strong>மண் மற்றும் தட்பவெப்பநிலை</strong><br />நல்ல வடிகால் வசதியுடைய பொறை மண் சாகுபடிக்குச் சிறந்தது. மிதமான வெப்பநிலையும், ஆண்டு மழையளவுக்குச் சிறந்தது. மிதமான வெப்பநிலையும், ஆண்டு மழையளவு 150 செ.மீ இருக்கவேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>விதை மற்றும் விதைப்பு</strong><br />விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது.</p> <p style="text-align: justify;"><strong>விதையளவு:</strong> ஒரு எக்டர் சாகுபடி செய்ய 2.5 கிலோ விதை தேவைப்படுகின்றது. விதைகளை நாற்றாங்களில் 15-20 செ.மீ இடைவெளியில் விதைத்து, நாற்றுக்கள் 3-4 வாரங்கள் ஆன உடன் நடவுவயலுக்கு எடுத்துச்செல்லவும். இப்பயிரினை விதைக்கட்டைகள் மூலம் உற்பத்தி செய்யலாம். ஒரு எக்டர் நடவு செய்ய 28,000 வேர்க்கட்டடைகள் தேவைப்படும். விதையினைக் காட்டிலும் இதனின் வளர்ச்சி குறைந்தே காணப்படும்.</p> <p style="text-align: justify;"><strong>நிலம் தயாரித்தல்</strong><br />நிலத்தை நன்கு உழுது பண்படுத்தவேண்டும். கடைசி உழவின்பொது ஒரு எக்டருக்கு 10 டன் தொழு உரம் இட்டு 60 செ.மீ இடைவெளியில் பார்சால் அமைக்கவேண்டும். பின் நாற்றுக்களை 60 நெ.மீ இடைவெளியில் நடவு செய்யவேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை</strong></p> <p style="text-align: justify;"><strong>அடியுரம் :</strong> ஒரு எக்டருக்கு 20:50:40 கிலோ தழை, மணி, மற்றும் சாம்பல் சத்து இடவேண்டும்.<br /><strong>மேலுரம் :</strong> நடவு செய்த 3,6 மற்றும் 9வது மாதத்தில் ஒரு எக்டருக்கு 15 கிலோ தழைச்சத்து இடவேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>நீர் நிர்வாகம்</strong><br />நடவு செய்தவுடனும், நடவு செய்த மூன்றாவது நாளில் நீர்ப்பாசனம் செய்வது அவசியம். மேலும் மண்ணின் ஈரப்பதத்திற்குகேற்ப நீர்ப்பாசனம் செய்யவேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>பின்நேர்த்தி</strong><br />இனம் வளர்ச்சிப் பருவத்தில் ஓரிரு முறை களையெடுத்தல் அவசியமாகும். பின்பு மண்ணைக்கவேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>ஒருங்கிணைந்த பயிர்ப்பாதுகாப்பு</strong><br />பூச்சி மற்றும் நோய்கள் இப்பயிரினைத் தாக்குவதில்லை. சாறு உளிஞ்சும் அசுவுனிப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த 2 மில்லி டைமெத்தோயேட் மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>அறுவடை</strong><br />முதல் அறுவடை நடவு செய்த 3-4வது மாதங்களிலும் அதன் பின்னர் 3-4 மாத இடைவெளியில் அறவடை செய்யலாம்.</p> <p style="text-align: justify;"><strong>மகசூல் </strong></p> <p style="text-align: justify;"><strong>இலைப்பாகம் :</strong> ஒரு வருடத்திற்கு 20-30 டன் / எக்டர்<br />எண்ணெய்<br />முதல் வருடம் - 20 கிலோ / எக்டர்<br />இரண்டாம் வருடம் - 60 கிலோ / எக்டர்<br />மூன்றாம் மற்றும் நான்காம் வருடம் - 70 கிலோ / எக்டர்</p> <h3 style="text-align: justify;">பச்சோலி</h3> <p style="text-align: justify;"><strong>இரகங்கள்</strong></p> <p style="text-align: justify;">ஜோகோர், சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசிய இரகங்கள் முதல் இரகமானது தரமான எண்ணையும், மற்ற இரண்டு இரகங்களும் அதிக அளவிலான எண்ணை கிடைக்கின்றது.</p> <p style="text-align: justify;"><strong>மண் மற்றும் தட்பவெப்பநிலை</strong></p> <p style="text-align: justify;">நல்ல வடிகால் வசதியுடைய இரு பொறை மண் சாகுபடிக்கு சிறந்ததாகும். வெப்ப மண்டலங்களிலும், ரப்பர், தென்னை மற்றும் காப்பி தோட்டங்களிலும் சாகுபடி செய்யலாம்.</p> <p style="text-align: justify;"><strong>விதைப்பு மற்றும் நடவு</strong></p> <p style="text-align: justify;">15-20 செ.மீ நீளமுடைய வேர்விட்ட தண்டுக்குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யலாம்.</p> <p style="text-align: justify;"><strong>பருவம் :</strong> ஏப்ரல் - மே</p> <p style="text-align: justify;"><strong>நிலம் தயாரித்தல்</strong></p> <p style="text-align: justify;">நிலத்தை நன்கு உழுது பண்படுத்தவேண்டும். கடைசி உழவின் போது ஒரு எக்டருக்கு 15 டன் தொழு உரம் இட்டு 60 செ.மீ இடைவெளியில் பார்சால் அமைக்கவேண்டும். பின் வேர்விட்ட குச்சிகளை 30 செ.மீ இடைவெளியில் நடவு செய்யவேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை</strong></p> <p style="text-align: justify;"><strong>அடியுரம் :</strong> ஒரு எக்டருக்கு 30 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து இடவேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>மேலுரம் :</strong> நடவு செய்த மூன்று மாதங்கள் கழித்து 30 கிலோ தழைச்சத்து இடவேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>நீர் நிர்வாகம் :</strong> மலைப்பகுதிகளில் பச்சோலி மானாவாரியாகப் பயிராக சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது, சமவெளிப்பகுதிகளில் 7-10 நாட்களில் நீர்ப்பாசனம் செய்யவேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>பின்நேர்த்தி</strong></p> <p style="text-align: justify;">இளம் வளர்ச்சிப் பருவத்தில் ஓரிரு முறை களையெடுத்தல் வேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு</strong></p> <p style="text-align: justify;">நூற்புழுக்களை கட்டுப்படுத்த ஒரு எக்டருக்கு 2 கிலோ கார்போபியூரான் மூலக்கூறு மருந்தினை நாற்றாங்காலில் இடவேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>அறுவடை</strong></p> <p style="text-align: justify;">முதல் அறுவடை 6-8 மாதங்களிலும், அதன் பின்னர் 3-5 மாதங்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம். அறுவடை செய்த இலைகளை நிழலில் உலர்த்தி எடுக்கவேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>மகசூல் :</strong> ஒரு வருடத்திற்கு ஒரு எக்டரிலிருந்து 30-40 கிலோ எண்ணை.</p> <h3 style="text-align: justify;">புதினா</h3> <p style="text-align: justify;"><strong>இரகங்கள்</strong><br />ஜப்பான் வகை - எம்ஏஸ் 1, எம்ஏ 2, ஹபிரட் 77, சிவாலிக் ஈசி – 41911<br />ஸ்பியர்மின்ட் வகை - எம்எஸ்எஸ்-1,5, பஞ்சாப் ஸ்பியர் மின்ட் -1<br />பெர்கோமின்ட் வகை - சிரன்<br />பெப்பர்மின்ட் வகை - குக்ரைல்</p> <p style="text-align: justify;"><strong>மண் மற்றும் தட்பவெப்பநிலை<br /></strong>வடிகால் வசதியுடைய இருபொறை மண், காரத்தன்மையுடைய மற்றும் அங்க்கச் சத்த நிறைந்த மண்வகைகள் அனைத்தும் சாகுபடிக்கு உகந்தவை. மிதவெப்ப மண்டலங்களில் சராசரி ஆண்டு மழையளவு 100-150 செ.மீ இருத்தல்வேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>விதை மற்றும் விதைப்பு<br /></strong>வேர் விட்ட தண்டுக்குச்சிகள் மூலம் புதினா இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது.</p> <p style="text-align: justify;"><strong>நிலம் தயாரித்தல்<br /></strong>நிலத்தை உழுது நன்கு பண்படுத்தவேண்டும். பின் எக்டருக்கு 10 டன் மக்கிய தொழு உரம் இட்டு தேவையான அளவில் பாத்திகள் அமைக்கவேண்டும். பின் வேர் விட்ட தண்டுக்குச்சிகளை 40 x 40 செ.மீ இடைவெளியில் ஜ¤ன் - ஜ¤லை மாதங்களில் நடவு செய்யவேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை</strong></p> <p style="text-align: justify;"><strong>அடியுரம் :</strong> ஒரு எக்டருக்கு 30,60,10 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து இடவேண்டும்.<br /><strong>மேலுரம் :</strong> நடவு செய்த 60 மற்றும் 120வது நாளில் ஒரு எக்டருக்கு 30 கிலே தழைச்சத்து உரத்தை இரண்டு முறை பிரித்து இடவேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>பின்செய் நேர்த்தி</strong><br />தேவைக்கேற்ப கைக்களை எடுத்து களைகளை கட்டுப்படுத்தவேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு<br /></strong>பொதுவாக புதியானவை பெருமளவில் பூச்சி மற்றும் நோய் தாக்குவதில்லை.</p> <p style="text-align: justify;"><strong>அறுவடை<br /></strong>நடவுசெய்த 5வது மாதத்தில் முதல் அறுயடையும் அதன் பினான்ர் மூன்று மாத இடைவெளியிலும் அறுவடை செய்யவேண்டும். நல்ல முறையில் பராமரிப்பு செய்தால் நான்கு ஆண்டுகள் வரை லாபகலமான மகசூல் எடுக்கலாம்.</p> <p style="text-align: justify;"><strong>மகசூல்<br /></strong>இலைப்பாகம் - ஒரு வருடத்திற்கு ஒரு எக்டரிலிருந்து 15 - 20 டன்<br />எண்ணெய் - ஒரு வருடத்திற்கு ஒரு எக்டரிலிருந்து 50 - 70 கிலோ</p> <p style="text-align: justify;">தகவல்: <a class="ext-link-icon" title="வேளாண் பல்கலைக்கழகம், பெங்களூரு (வெளி இணையதளம். புதிய பக்கத்தில் திறக்கிறது)" href="https://www.uasbangalore.edu.in/en/home//" target="_blank" rel="noopener">வேளாண் பல்கலைக்கழகம், பெங்களூரு </a></p> </div>