மீன் வளர்ப்பு மூலம் கழிவு நீரை சுத்திகரித்தல் நாட்டின் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக, வெளியேற்றப்படும் கழிவு நீரின் அளவு அதிகமாகி, அதனை சுத்தம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுநீர், திடக்கழிவுகளின் அளவும் அதிகமாகி வருகிறது. இதனால் கிராமப்புற, நகர்புறக் கழிவுநீரை சுத்தம் செய்து பயன்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உயிரியல் சுத்தகரிப்பு முறையின் தத்துவம் சீரான முறையில் பாக்டீரியாக்களைப் பயன்படுத்தி, பிராணவாயு மூலம், அங்ககப்பொருட்களை, கார்பன்டை ஆக்சைடு, நீர், நைட்ரஜன், சல்பேட் போன்றவையாக மாற்றும் பணியே உயிரியல் முறை சுத்திகரிப்பு ஆகும். உள்ளூரில் கிடைக்கும் கழிவுகளை சுத்தம் செய்வதற்கு, திடக் கழிவுகளை பிரித்தெடுத்தல், வடிகட்டிகளை பயன்படுத்துதல், பிராணவாயேற்றுதல், கழிவுகள் குளங்களின் அடியில் தேங்கி இருக்கச் செய்தல், காற்றோட்டம் உண்டாக்குதல், காற்று இல்லாமல் சுத்திகரிப்பு செய்தல் ஆகிய முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு புதிய அணுகுமுறை- காற்று இல்லாத மேலோட்ட கழிவு சுத்திகரிப்பு முறை (UASB) இப்போது அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தப்படும் முறையான, கழிவு நீர் பயன்படுத்தி விவசாயம் செய்வது, ஒரு உயிரியல் முறையே. இது பல நாடுகளில் இப்போதும் பின்பற்றப்படுகிறது. கல்கட்டா மாநகரில் கழிவுநீரை பயன்படுத்தி மீன் வளர்த்து வருவது உலகளவில் இன்றும் பேசப்படுகிறது. இதன் முக்கிய நோக்கமே, கழிவுகளில் உள்ள ஊட்டச் சத்துக்களை முறையாக பிரித்தெடுத்து வீணாகாமல் பயன்படுத்துவதேயாகும். இந்த முறையில் கிடைக்கும் உத்திகளையும், புதிய நுட்பங்களையும் பயன்படுத்தி கழிவுநீர் பராமரிப்பு செய்து, மீன்வளர்ப்பு மேற்கொண்டால், உள்ளூர்கழிவையும் சுத்தம் செய்யலாம். மீன்வளர்ப்பு மூலம் வருமானமும் பார்க்கலாம். சுத்திகரிப்பு முறை களைகள் உள்ள குளங்கள் மீன் வளர்ப்பு மூலம் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் முறையில், கழிவுநீர் உட்புகும் பாதை, களை வளர்ப்பு பகுதி, கழிவுநீரில் மீன் வளர்க்கப்படும் குளங்கள், முதன்மைக்குளம், நீர்வெளியேறும் பகுதி ஆகியன இருக்கும். களைவளர்ப்பு பகுதியில் ஒருசில குளங்கள் வரிசையாக அமைக்கப்பட்டு அதில் பைரோடீலா, ஓல்பியா, லெம்னா ஆகிய களைகள் வளர்க்கப்படுகின்றன. கழிவுநீர் இந்தக் குளங்களுக்குள் மோட்டார் உதவியுடன் பம்ப் செய்யப்பட்டு, 2 நாட்கள் நிலைநிறுத்தபட்டு, பின்னர் மீன்வளர்ப்பு குளங்களுக்கு அனுப்பப்படுகிறது. சுத்திகரிப்பு பணிக்கான இந்த அமைப்பில் ஒரு MLD கழிவு நீரை சுத்தம் செய்ய, 18 களைவளர்ப்பு குளங்கள் (25மீ x 8மீ x 1மீ) மூன்று வரிசைகளில் கட்டப்படுகின்றன. இக்குளங்கள் வழியாக கழிவுநீர் அனுமதிக்கப்பட்டு சுத்திகரிப்பு பணி நடைபெறுகிறது. இம்முறையில் 2 மீன் வளர்ப்பு குளங்கள் (50மீ x 20மீ x 2மீ) இரண்டு மீன் விற்பனை குளங்கள் (40மீ x 20மீ x 2மீ) அமைக்கப்படுகிறது. இதில், முதன்மை சுத்திகரிப்பு செய்யப்பட்ட கழிவுநீர் அனுமதிக்கப்படுகிறது. மேலும் புவனேஷ்வரில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்புகளில், 8 MLD கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யலாம். அதிக அளவு கழிவு நீரை சுத்தம் செய்வதற்கான சில மாற்றங்களும் இங்கு செய்யப்பட்டுள்ளன. கழிவு நீரில் உள்ள உயிரிகளின் பிராணவாயுத் தேவை (BOD) 100-150 மி.கிராம்/ ஒரு லிட்டருக்கு என்றளவில் இருத்தல் நல்லது. இதற்கு மேல் BOD அளவுகள் காணப்பட்டால், காற்று புகா சுத்திகரிப்பு தொகுதிகளை உபயோகிக்க வேண்டும். களை வளர்ப்பு குளங்கள் பயன்படுத்தப்படுவது, உயர் உலோகங்களையும் சில ரசாயனங்களையும் கழிவுகளிலிருந்து நீக்க உதவியாய் இருக்கிறது. இல்லையென்றால் இவை மீன் உடலில் சேர்ந்து, மனித உடலுக்கும் இந்த உலோகங்கள்/ ரசாயனங்கள் சென்று உபாதைகளை ஏற்படுத்தும். மேலும் இம்முறை தூய்மையான சத்துக்கள் வழங்குவதோடு, பிராண வாயு கொடுப்பதோடு, சரியான சூழலுக்கும் வழிவகுக்கின்றது. இந்த சுத்திகரிப்பு பணியினால் கழிவுகளிலுள்ள உயிரிகளின் பிராணவாயுத் தேவை (BOD) 100 கிராம்/ ஒரு லிட்டர் என்றளவிலிருந்து, சுத்திகரிப்பு செய்தபின் 15-20 மி.கிராம்/ஒரு லிட்டர் என்றளவிற்கு 5 நாட்களில் குறைகிறது. மேலும் இந்த சுத்திகரிப்பு பணியினால் உயர் உற்பத்தி பெறலாம். 3-4 டன் கெண்டை - ஒரு ஹெக்டரில் உற்பத்தி செய்ய முடிகிறது. உயிரியல் முறை சுத்திகரிப்பு செய்வதில் உள்ள கடினம், குளிர்காலத்திலும், மித உண நிலை நிலவும் இடங்களிலும், சுத்திகரிப்பு பணி சற்று காலதாமதமாகும். ஒரு MLD கழிவுகளை சுத்தம் செய்ய அமைக்கப்படும் குளத்தின் அளவு ஒரு ஹெக்டர் ஆவதுடன், நடைமுறைச் செலவுகளை சந்திக்க உதவும் வருமானமும், இம்முறையின் சிறப்பு அம்சமாகும். ஒரு MLD கழிவு சுத்திகரிப்பு செய்வதற்கான செலவு வ. எண் பொருள் தொகை (லட்சத்தில்) I. செலவுகள் அ. நிலையான மூலதனம் 1. களை வளர்ப்பு குளக்கட்டுமானம் (0.4†ஹெக்டர்) 3.00 2. மீன் வளர்ப்பு குளங்கள் (0.2† ஹெக்டர்) 1.20 3. மீன்விற்பனைக் குளங்கள் (0.1 ஹெக்டர்) 0.60 4. குழாய்கள், கன்மாய்கள், கழிவுநீர் பாதைகள் 5.00 5. மோட்டார் பம்ப், குளக்கரை அமைப்பு 5.00 6. தண்ணீர் பரிசோதனை கருவி 1.00 மொத்தம் 15.80 ஆ. நடைமுறை செலவு 1 கூலிகள் (இரண்டு பேர்- 2000 ரூபாய்/மாதத்திற்கு) 0.48 2. மின்சாரம் மற்றும் எரிபொருள் 0.24 3. மீன் குஞ்சுகளின் விலை 0.02 4. இதர செலவுகள் 0.10 மொத்தம் 0.84 II வரவு 1. 1000 கிலோ மீன் விற்பனை (ஒரு கிலோ 30 ரூபாயில்) 0.30 நடைமுறைச் செலவுக்கு கிடைக்கும் வருமான சதவிகிதம் 35% மூலம்: ஒரிசா, புவனேஷ்வர் - மத்திய நன்நீர் மீன்வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் இயற்கை இறால் வளர்ப்பு - ஒரு விவசாயியின் அனுபவம் இறால் வளர்ப்பு விவசாயி, ஜோஸஃப் கோரா, குட்டநாடு, ஆலப்புழை; மற்றும் அவர் குடும்ப உறுப்பினர்கள். நல்ல நீர் வசதி மற்றும் செழிப்பான நன்செய் நிலப்பரப்பு கொண்டது கேரளாவில் உள்ள குட்டநாடு பகுதி. நெல் பயிரிடுவதற்கு மிகவும் ஏற்ற இடம். ஆனால், இந்த நிலைமை தற்போது மாறிவிட்டது. அதிக முதலீடு, கூலியாட்கள் பற்றாக்குறை, உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களுக்கு உரிய விலை கிடைக்காமை ஆகியவை, இந்தப் பகுதி விவசாயிகள் தற்போது சந்தித்து வரும் சவால்கள். குறைவாக செலவாகும் மாற்று சாகுபடி முறைகளை விவசாயிகள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேலையில், இயற்கை நெல் விவசாயியான திரு ஜோஸஃப் கோரா, தன்னுடைய நான்கு ஹெக்டேர் நிலத்தில் இயற்கை முறையில் இறால் வளர்த்து விற்பனை செய்வதில் முதன்முதலில் ஈடுபட்டார். முன்னேற்றத்திற்கான மாற்றம் கடற்சார் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (MPEDA) மற்றும் இதர மேம்பாட்டு அமைப்புகள் இவருக்கு இயற்கை மீன் வளர்ப்பும் அதற்கு ஏதுவான இறால் வகை பற்றிய யோசனைகளை முன்வைத்தன. அவரும் அவற்றை முயன்று பார்க்க முடிவு செய்தார். சுமார் பதினோரு லட்சம் இறால் குஞ்சுகளை தன்னுடைய நான்கு ஹெக்டேர் நிலத்தில் வளர்க்கத் தொடங்கினார். இந்த முனைப்பில் குஞ்சுகள் ஏற்பாடு, அவற்றிற்கான உணவுகள், ஆலோசனை மற்றும் நேரில் வந்து பார்வையிடுதல் ஆகிய பல வகையிலான உதவிகள் அதிகாரிகளால் வழங்கப்பட்டன. ஏழு மாதங்களுக்குப் பின், சுமார் 1,800 கிலோ எடைகொண்ட, (ஒவ்வொன்றும் சுமார் 30 கிராம் எடை) இறால்கள் இவருடைய நான்கு ஹெக்டேர் நிலத்தில் விற்பனைக்குத் தயாராக வளர்ந்தன. மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும் திரு ஜோஸஃப் கோராகரிவெலித்தாரா, ராமன்கரைதபால்பெட்டி எண்: 689595குடட நாடு, ஆலப்புழைதொலைபேசி எண்: 0477-2707375 கைபேசி எண்: 9495240886 திரு ஆர் ஹாலிதொலைபேசி எண்: 04070 - 2622453கைபேசி: 9947460075 ஆதாரம்: தி இந்து, ஜனவரி 8, 2009